என் கிராமம்
சின்ன வயதில்
நான்
சுற்றி திரிந்த கிராமத்தில்!
தோழிகளுடன்
மாடுகளுக்கு
புல் அறுக்க
வயல் வரப்புகளில்
ஓடியாடியதும்!
தோழர்களுடன்
கிட்டிபுள் விளையாடியதும்!
வீட்டு படிக்கட்டுக்களில்
ஏழு கல் ஆட்டமும்!
கிராம வீதிகளில்
பாண்டி ஆடியதும்!
வீட்டு திண்ணைகளில்
தாயம் ஆட்டமும்!
ஆழ குளத்தில்
நீச்சல் பழகியதும்!
இன்றும் என் நெஞ்சில்
நீங்கா இனிய நினைவுகள்!
ஆனால்
இன்று
அதே
கிராமத்திற்கு
சென்ற பொழுது
கிராம வீதிகளில்
ஆள் அரவம் இல்லை!
வீ ட்டு திண்ணைகள் குளம் என்று ...
எங்கும் ...
வெறிச்சோடி கிடந்தன!
அட..
ஏன்!
என் கிராமத்திற்கு
என்னாயிற்று?
பதரிய படி
வீட்டிற்குள்
நுழைந்தால்
எல்லாரும் அமர்ந்திருந்தனர்
T . V என்னும்
அந்த
குட்டி பிசாசின் முன்!